இயக்குநர் பா.ரஞ்சித்தை மும்பைக்கு வரவழைத்து விருந்தளித்த பிரபல இந்தி இயக்குநர்…
’காலா’ படத்தை மிகவும் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். தற்போது உங்களுடைய அத்தனை படங்களையும் பார்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன்’ என்று இயக்குநர் பா.ரஞ்சித்தை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரபல இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்.
’காலா’ படத்தை மிகவும் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். தற்போது உங்களுடைய அத்தனை படங்களையும் பார்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன்’ என்று இயக்குநர் பா.ரஞ்சித்தை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரபல இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்.
பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் ஹாட் டாபிக் இருக்கிறது.
So late to see Kaala but now I want to see all the films of @beemji https://t.co/bftmbzpwZh
— Anurag Kashyap (@anuragkashyap72) April 23, 2019
சமீபத்தில் ‘காலா’ ‘பரியேறும் பெருமாள்’ படங்களை பார்த்த இயக்குனர் அனுராக். இயக்குனர் இரஞ்சித்தை சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” திரைப்படம் குறித்து சிலாகித்துப் பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்தும் சிலாகித்து பேசியவர்,’இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.
“இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அநுராக் காஷ்யப்.
இந்த சந்திப்பு குறித்து பதிலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித், “டியர் அனுராக் நான் உங்களுடைய தீவிரமான ரசிகன். இன்று மாலை உங்களுடன் நடந்த சந்திப்பு மிகவும் பெருமையானது. நல்ல உரையாடலுக்கும் நீங்கள் தந்த சுவையான உணவுக்கும் நன்றி’என்று நெகிழ்ந்திருக்கிறார் பா.ரஞ்சித்.
Dear @anuragkashyap72 ,I have been a big fan of your films. Happy to have spent this evening with you. I am glad you liked #Kaala ??. Thanks for the conversation and the great food.??? pic.twitter.com/PqSd79Vypo
— pa.ranjith (@beemji) April 23, 2019.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் ராஜமவுலியிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சினேன்: பிரபல நடிகை ஓபன் டாக்!