பிக் பாஸ்: மதுமிதா தற்கொலை முயற்சிக்கு காரணம் இது தானா?
மதுமிதா எதற்காக திடீரென்று வெளியேறியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மதுமிதா எதற்காக திடீரென்று வெளியேறியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 56 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால், மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர்.
வனிதா மீண்டும் வந்த நாள் முதல் பொது மக்கள் போட்டியாளர்களை எப்படி பார்க்கிறார்கள்? என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அப்போது மதுவிடம், ‘நீ கேள்வி கேட்பது அனைவருக்கும் பிடித்துள்ளது. அதனால் அதை இன்னும் சத்தமாகச் செய்’ என்று சொல்லி அவர் மண்டையை வாஷ் செய்தார். அவரின் பேச்சைக் கேட்டு மது அந்த வாரம் முழுக்க ஆண்கள் அணியை வம்புக்கு இழுத்துக் கேட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மதுமிதா திடீரென்று பாதி போட்டியிலிருந்து வெளியேறினார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் ஏன்? வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. வியாழக்கிழமை அன்று கார்டன் ஏரியாவில் ஹெலோ டாஸ்க் நடைபெற்றது. அந்த சமயத்தில் மதுமிதா, ‘வர்ண பகவான் கர்நாடக காரர் போல அங்கு பெய்த மழை இங்க பெய்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’ என்று பேசியுள்ளார். இதை கேட்ட ஷெரின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை வழக்கம் போல் மது ஏற்க மறுத்ததால் அங்கு பெரும் பூகம்பம் வெடித்தது. அப்போது ஷெரின்,’மது இங்கே இருந்தால் இனி நான் கேம் விளையாட மாட்டேன்’என்று அழுத்தமாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து சக போட்டியாளர்களும், மது மேல் தப்பு உள்ளது என்று மாறி மாறி சொல்லத்,தனது பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க மது தனது கையை அறுத்துக்கொண்டுள்ளார்.
மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொண்ட சமயத்தில் இதை ஒளிபரப்ப முடியாது என்றும், ஹலோ ஆப்பில் தனது பதிவை மாற்றுமாறும் பிக்பாஸ், மதுவிதாவிடம் வலியுறுத்தியுள்ளார். அதையும் மீறி தனது கருத்தில் விடாபிடியாக நின்றதால் மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.