சேரன் முதுகில் குத்திவிட்டு நண்பர்களிடம் கண்ணீர் விட்ட லாஸ்லியா
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 56 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால், மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து இன்றைக்கான முதல் புரோமோவில் லாஸ்லியா, சேரன் தன்னை சிறைக்கு அனுப்பியது பிடிக்கவில்லை என்று கூறி நாமினேட் செய்தார். இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
#Day57 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/j6VPVl0X8L
— Vijay Television (@vijaytelevision) August 19, 2019
அதில் லாஸ்லியா, ‘சேரன் செய்தது நியாயம் இல்லை’னு சொன்ன’ல? ஆனா இன்றைக்கு நான் நியாயமாக இருக்க வேண்டும் என்று தான் அவரை குத்தினேன். இது’ல யாரு தப்பு? யார் சரி? அப்போ நானும் அவரிடம் இருந்து அதை எதிர்பார்த்து இருக்க கூடாது’ல. தப்பு தானே? என்று தனது நண்பர்களிடம் அமர்ந்து அழுது கொண்டே பேசுவது போல் முடிக்கப்பட்டுள்ளது.