7 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது குடும்ப தலைவிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்- டிடிவி தினகரன்

 

7 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது குடும்ப தலைவிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்- டிடிவி தினகரன்

மஞ்சக்குப்பத்தில் கடலூர் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது பேசிய டிடிவி தினகரன், “இயற்கை பேரழிவில் இருந்து கடலூரை பாதுகாக்க அமமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சில்லறை விலையில் மீன் விற்பனையாளர்களுக்கு ஐஸ் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், கொடுமை ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். தொழில்துறை அமைச்சரின் தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில்துறை வளர்ச்சி பெறவில்லை.

7 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது குடும்ப தலைவிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்- டிடிவி தினகரன்

தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் வேரோடு சாய்த்து, அமமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். திமுகவும், பழனிசாமி அரசும் நிவாரண நிதியை கொள்ளை அடித்தார்களே தவிர மக்களுக்கு நிரந்தர தீர்வு செய்துதரவில்லை. காங்கிரஸ், பாஜக, எடப்பாடி அணிக்கு தக்க பாடம் புகட்ட அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், கொடுமை ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். தொழில்துறை அமைச்சரின் தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில்துறை வளர்ச்சி பெறவில்லை. தமிழகம் 7 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது குடும்ப தலைவிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்” எனக் கூறினார்,