நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
பெங்களூரு: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர், தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
Our symbol okayed by election commission is #whistle .. let us CITIZENS be the WHISTLE BLOWERS of these CORRUPT..LAZY..IRRESPONSIBLE. .. POLITICIANS ..let’s empower #citizensvoice in parliament.. #bengalurucentral pic.twitter.com/VRIKwLyvm0
— Prakash Raj (@prakashraaj) March 29, 2019
அதேபோல், கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷீன் மனைவியும் நடிகையுமான சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சுமலதா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றால், 52 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் இருந்து சுயேட்சையாக நாடாளுமன்றம் செல்பவர்கள் என்ற பெருமையை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க