அராஜகத்தின் உச்சத்தில் நடிகர் பாலகிருஷ்ணா; சொந்த கட்சி தொண்டரை தாக்கிய கொடூரம்!
பாலகிருஷ்ணா இதுபோன்று சர்சைகளுக்குள் சிக்குவது இது முதன் முறையல்ல. பாலகிருஷ்ணாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பொதுமக்களை அவர் அடித்தது ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது
விழியநகரம்: தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ-வும் நடிகருமான பாலகிருஷ்ணா தான் சார்ந்திருக்கும் கட்சித் தொண்டரை ஓட, ஓட துரத்திச் சென்று அடித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், ஆந்திர மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் நடிகருமான பாலகிருஷ்ணா, தான் சார்ந்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரை ஓட, ஓட துரத்திச் சென்று அடித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
Dear Balakrishna – You may be the Biggest star in Andhra / Telangana. But how dare you treat common people like this? Shame on you. If this was tamilnadu – you would have given an unconditional apology by now !! pic.twitter.com/upmuTGYPsc
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 7, 2019
பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுக்க அவரது அருகில் சென்ற தொண்டரை, துரத்திச் சென்று அவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்துபூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். பாலகிருஷ்ணா இதுபோன்று சர்சைகளுக்குள் சிக்குவது இது முதன் முறையல்ல. பாலகிருஷ்ணாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பொதுமக்களை அவர் அடித்தது ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நாற்காலியில் அமர்ந்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதும் சர்ச்சையானது.
முன்னதாக, கடந்த மாதம் பத்திர்கையாளர் ஒருவரை பாலகிருஷ்ணா கன்னத்தில் அறைந்து, கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க
ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிஞ்சிரும்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி