கூலிப்படையை ஏவி செய்தியாளர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர்!

 

கூலிப்படையை ஏவி செய்தியாளர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர்!

தட்டார்மடம் ப‌குதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, கட்டப்பஞ்சாயத்து செய்தது, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நடந்த மணல் கடத்தல் என கஜேந்திரனின் சட்டவிரோத செயல்களை தனியார் தொலைகாட்சி செய்தியாளர் முத்துவேல் தொடர்ச்சியாக செய்தியாக வெளியிட்டு வந்தார்.

தூத்துக்குடி தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன், தமிழ்ப்பட வில்லன் மாதிரி பெயருக்கேற்ற‌ பொருத்தமான நடவடிக்கைகளை தொடந்துள்ளார். தட்டார்மடம் ப‌குதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, கட்டப்பஞ்சாயத்து செய்தது, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நடந்த மணல் கடத்தல் என கஜேந்திரனின் சட்டவிரோத செயல்களை தனியார் தொலைகாட்சி செய்தியாளர் முத்துவேல் தொடர்ச்சியாக செய்தியாக வெளியிட்டுவந்தார். இதனால் முத்துவேல்மேல் தனிப்பட்ட வெறுப்பு கொண்ட இன்ஸ்பெக்டர் ககேந்திரன், கடந்த தீபாவளியன்று பொய்யான வழக்கின்கீழ் முத்துவேலை கைது செய்ய முயன்றாலும், காவல் கண்காணிப்பாளர் தலையீட்டால் கைது தவிர்க்கப்பட்டது.

Muthuvel

இதற்கிடையில், வழக்கறிஞர் ஒருவ‌ரை கஜேந்திரன் தாக்கியதை கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த‌ ஆர்ப்பாட்டத்தையும் முத்துவேல் செய்தியாக்கியுள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தன் பணி இட மாறுதலுக்கு காரணமான செய்தியாளர் முத்துவேலை பழிவாங்கும் நோக்கோடு, செய்தியாளர் முத்துவேலை அவரது அலுவலகத்தில் வைத்து ரவுடி சண்முகநாதன் தலைமையிலான கூலிப்படையை வைத்து அரிவாளால் வெட்டியுள்ளார். தலை, வயிறு, கை என உடல் முழுவதும் வெட்டுக்காயம்பட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தன்னை கொலை செய்ய கூலிப்படையை ஏவியது காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போ இன்ஸ்பெக்டர் கஜேந்திரனை, ஆயுதப்படையிலிருந்து எந்தப்படைக்கு மாற்ற போகிறார்களோ?