தேர்தலுக்காக முதல் நாளே விரலில் மை வைத்தார்கள்!? உ.பியில் பரபரப்பு!

 

தேர்தலுக்காக முதல் நாளே விரலில் மை வைத்தார்கள்!? உ.பியில் பரபரப்பு!

பா.ஜ.க-வை சேர்ந்த 3 பேர் தங்கள் கிராமத்துக்கு நேற்று வந்ததாகவும்,அவர்கள் அந்த கிராமத்து மக்களுக்கு தலா 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு,

17-வது மக்களவை தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது.ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடுமுழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அதில் சந்தாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராம மக்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்!

பா.ஜ.க-வை சேர்ந்த 3 பேர் தங்கள் கிராமத்துக்கு நேற்று வந்ததாகவும்,அவர்கள் அந்த கிராமத்து மக்களுக்கு தலா 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, தங்கள் கைகளில் மை வைத்துவிட்டு சென்றதாகவும் இன்று தெரிவித்து உள்ளனர்.

தேர்தலுக்கு முதல்நாளே வாக்காளர்களுடைய விரல்களில் மைவைத்த இந்த குற்றச்சாட்டு உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுபற்றி,தேர்தல் அதிகாரிகளும்,போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.