நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை!

 

நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை!

நெல்லை

நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு(31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையும், வேலுவும் வீட்டில் இருந்து வெளியேறி மும்பை சென்று விட்டனர்.

நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை!

இந்த நிலையில், கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு வந்த வேலு, திங்கள் கிழமை இரவு அயன் சிங்கம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தெற்கு பாப்பான்குளம் அருகே வந்தபோது வேலுவை வழிமறித்த சுதாகர், அவரது சகோதரர் சுடலைமுத்து உள்ளிட்ட 3 பேர், அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழந்தார். தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார், சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் மூவரும் போலீசில் சரணடைந்த நிலையில், அவர்களை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.