திருப்பூரில் இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

 

திருப்பூரில் இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

திருப்பூர்

திருப்பூர் அருகே இளைஞர் மர்மநபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தையின் பின்புறம் உள்ள ஏடிபி சாலையில் உள்ள பழைய துணி குடோனில் நேற்று மதியம் தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கொலையான நபர் எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்த சம்சுதீன்(23) என்பது தெரிய வந்தது.

திருப்பூரில் இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

இவர் நேற்று காலை நண்பர்களுடன் வெளியே வந்த நிலையில், மதிய உணவிற்காக நண்பர்கள் அழைத்தபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் வழக்கமாக செல்லும் இடத்தில் பார்த்தபோது கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து, திருப்பூர் மத்திய காவல் நிலைய நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளைஞர் மர்மநபர்களாகல் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தென்னம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.