24 நாட்களுக்கு முன்பு காணமால் போன இளைஞர், எலும்புத் துண்டுகளாக மீட்பு!

 

24 நாட்களுக்கு முன்பு காணமால் போன இளைஞர், எலும்புத் துண்டுகளாக மீட்பு!

கேரளாவில் 24 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞரின் உடல் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் விஷ்ணு ஹரிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள வைக்கோமில் வசித்து வந்துள்ளார்.

ஜூன் 2-ந்தேதி அன்று ஹரிதாஸ் காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 24 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோட்டையத்தில் நாட்டகம் என்ற கைவிடப்பட்ட இடத்தில் ஒரு மரத்திற்கு கீழே எலும்புத் துண்டுகள் காணப்பட்டுள்ளன. மரத்தின் கிளைகளில் ஒரு சட்டை தொங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது அப்போது சுத்தம் செய்து கொண்டிருந்த சில தொழிலாளர்கள் எலும்புக்கூடுகள் கிடைப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 2 வரும் செருப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஹரிதாஸ் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் பை காணவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் ஹரிதாஸ் குமாரகோமிலுள்ள ஒரு பார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது ஹரிதாஸின் உடல் அவர் வேலை பார்த்து வந்த பார் ஹோட்டலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 நாட்களுக்கு முன்பு காணமால் போன இளைஞர், எலும்புத் துண்டுகளாக மீட்பு!

ஹரிதாஸ் காணாமல் போவதற்கு முன்பு நன்றாகத்தான் இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வேலைக்கு சென்ற ஹரிதாஸ் குமாரகோமில் பேருந்தில் இறங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து, அவருக்கு ஒரு அழைப்பு வந்தபின்பு மற்றொரு பஸ்ஸில் கோட்டையும் சென்றுள்ளார். பின்னர் அதே நாளில் ஹரிதாஸ் காணாமல் போயுள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

“இது ஒரு திட்டமிடப்பட்ட கொலையாகத்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுவாக பலர் போதைப்பொருட்கள் உபயோகப்படுத்தும் ஒரு இடத்திலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் எவ்வாறு நடந்தது என்று கட்டாயம் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸ் தெரிவித்துள்ளனர்.