இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்து- இளைஞர் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்து- இளைஞர் உயிரிழப்பு

தேனி

கம்பம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம், ஜீப் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரள எல்லையில் உள்ள கம்பம் மெட்டு சோதனைச்சாவடி வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கம்பம் – குமுளி சாலையில் உள்ள சந்திப்பில் காய்கறி பாரம் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியது.

இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்து- இளைஞர் உயிரிழப்பு

இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கம்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக கம்பம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.