மானாமதுரை அருகே கார் மோதி இளைஞர் பலி!

 

மானாமதுரை அருகே கார் மோதி இளைஞர் பலி!

சிவகங்கை

மானாமதுரை அருகே சாலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த உடையான்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்வரன் (21). இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை ராமேஸ்வரம் – மதுரை நெடுஞ்சாலையில் விக்னேஷ்வரன் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மானாமதுரை அருகே கார் மோதி இளைஞர் பலி!

உடையான்பட்டியை அருகே உள்ள ராஜகம்பீரம் அருகே சென்றபோது விக்னேஷ்வரன் மீது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் மானாமதுரை டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.