தம்பியை மதுக்குடிக்க அழைத்த நபரை, கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன்

 

தம்பியை மதுக்குடிக்க அழைத்த நபரை, கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன்

கோவை

பொள்ளாச்சி அருகே தம்பியை மதுக்குடிக்க அழைத்துச்சென்ற நபரை, அண்ணன் கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தம்பியை மதுக்குடிக்க அழைத்த நபரை, கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன்

கோவை மாவட்டம் நெகமம் வளசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(34). இவரது தம்பி ராம்குமார்(27). இவர், காளிபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(50) என்பவருடன் இணைந்து அடிக்கடி மதுக்குடிக்க செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமிக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி மீண்டும் ராம்குமாரை மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கருப்பசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் சக்திவேல் உருட்டுக்கட்டையால் கருப்பசாமியை தாக்கினார்.

தம்பியை மதுக்குடிக்க அழைத்த நபரை, கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன்

இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சக்திவேல் மீது கொலை வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்..