ஆம்பூர் அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி

 

ஆம்பூர் அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே தடுப்பணையில் மீன்பிடித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிலால் நகரை சேர்ந்தவர் இம்தியாஸ் (35). இவர் அதே பகுதியை நண்பர்களுடன் நேற்று கம்பிகொல்லை பகுதியில் உள்ள ஆனைமடுகு தடுப்பணைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். தடுப்பணையில் தேங்கியிருந்த நீரில் வலையை கொண்டு மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக இம்தியாஸ் ஆழமான பகுதியில் மூழ்கினார்.

ஆம்பூர் அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி

இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்பு அவர்கள் இம்தியாசை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்த, ஆம்பூர் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருவமனைக்கு அனுப்வி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.