ஓடும் ரயிலில் மூச்சு திணறலால் இளைஞர் பலி… சக பயணிகள் அதிர்ச்சி…

 

ஓடும் ரயிலில் மூச்சு திணறலால் இளைஞர் பலி… சக பயணிகள் அதிர்ச்சி…

ஈரோடு

ஈரோட்டில் ஓடும் ரயிலில் மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (23). இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கேரளாவில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், கடந்த 8ஆம் தேதி எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் மூலம் விழுப்புரத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஓடும் ரயிலில் மூச்சு திணறலால் இளைஞர் பலி… சக பயணிகள் அதிர்ச்சி…

நேற்று முன்தினம் அதிகாலை ரயில், ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்தபோது சதீஷுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அவர் பயணித்த பெட்டிக்கு சென்ற ரயில்வே மருத்துவர், சதீஷை பரிசோதித்து பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

சதீஷ் கொரோனாவால் இருந்து இருக்கலாம் என கருதிய சக பயணிகள், அந்த பெட்டியில் பயணிக்க அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் அருகில் உள்ள பெட்டிக்கு மாற்றப்பட்டு பயணம் செய்தனர். தொடர்ந்து, ரயில்வே போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.