தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திய மகன் பலி!

 

தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திய மகன் பலி!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர். இவரது மகன் சங்கிலி முருகன் (31). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், சொக்கலிங்கம் கடந்த 12ஆம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திய மகன் பலி!

தந்தை இறந்ததால், மன வேதனையில் இருந்து வந்த சங்கிலி முருகன் அதிகளவில் மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே மதுபோதையில் சரிந்து விழுந்து சங்கிலி முருகன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சங்கிலிமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.