மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

 

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. இவரது மகன் அஜய்குமார்(22). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வருத்தமுற்ற அவரது பெற்றோர் மதுப்பழக்கத்தை கைவிடும் படி கூறி வந்துள்ளனர். ஆனால், அஜய்குமார் அதனை கைவிடாமல் இருந்துள்ளார்.

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் அஜய்குமார் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். பின்னர் தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இதனை அறிந்த வாணியம்பாடி நகர போலீசார், விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவகும் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.