‘மதுபோதையில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு’: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை!

 

‘மதுபோதையில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு’: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை!

விழுப்புரம் அருகே சூதாட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே இருக்கும் நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், முகேஷ் என்ற மகன் இருக்கிறார். மெடிக்கல் ரெப்ரஸ்ன்டேடிவ்வாக பணியாற்றி வந்த தனசீலனுக்கு சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் தனசீலனுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றியதில், மனைவி குழந்தையை தூக்கிக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

‘மதுபோதையில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு’: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை!

தனியே வசித்து வந்த தனசீலன், சூதாட்டம் ஆடுவதும் விலைக்கு செல்வதுமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று தனசீலனின் வீட்டில் லைட் போடாமல் இருந்ததால் அவரது சகோதரர் லைட் போட சென்றிருக்கிறார். அப்போது, முகம் சேதமடைந்த நிலையில் தனசீலன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் அவரது சகோதரர். தகவல் அறிந்து வந்த போலீசார் தனசீலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த சிலரோடு இவர் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது குடிபோதையில் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் தனசீலனை கொடூரமாக கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. தனசீலனுடன் சூதாட்டம் விளையாடிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.