திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது!

 

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது!

மதுரை மாவட்டத்தில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் வீட்டுக்குத் தெரியவே சதீஷை எச்சரித்துள்ளனர். அதையும் மீறி இருவரின் காதலும் தொடர்ந்துள்ளது.

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது!
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வெளியே சென்ற சிறுமியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால், சதீஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் காணவில்லை. இந்த நிலையில் 25ம் தேதி சிறுமி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது சதீஷ் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சதீஷ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.