சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

 

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

தேனி

ஆண்டிபட்டி அருகே சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த பாலக்கோம்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டவர் (22). இவர் கடந்த 18ஆம் தேதி பெரியகுளம் அடுத்த பங்களாபட்டியை சேர்ந்த சிறுமியை கடத்திச்சென்று, உசிலம்பட்டி முருகன் கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பழனியாண்டவர், சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பழனியாண்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.