சச்சின் பைலட் போன்ற இளைஞர்களிடம் பொறுமையே இல்லை… திக் விஜய் சிங் வேதனை

 

சச்சின் பைலட் போன்ற இளைஞர்களிடம் பொறுமையே இல்லை… திக் விஜய் சிங் வேதனை

சச்சின் பைலட் போன்ற இளைஞர்களிடம் பொறுமையே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அவரை சமாதானம் செய்ய முடியாத நிலையில், அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சச்சின் பைலட் போன்ற இளைஞர்களிடம் பொறுமையே இல்லை… திக் விஜய் சிங் வேதனைஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சச்சின் பைலட் எம்.பி-யாக, மத்திய அமைச்சராக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக, ராஜஸ்தான் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது என்ன? அவர் இன்னும் இளைஞர்தான். அவருக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவே உள்ளது. இந்த மாதிரியான இளைஞர்களிடம் பொறுமையே இருப்பது இல்லை” என்றார்.

சச்சின் பைலட் போன்ற இளைஞர்களிடம் பொறுமையே இல்லை… திக் விஜய் சிங் வேதனைசச்சின் பைலட் தன்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையை அறிவிக்கவில்லை. பா.ஜ.க-வில் சேரப் போவது இல்லை என்று அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் பா.ஜ.க முதல்வர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை அவர் கூறி வரும் நிலையில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.