‘மதுபோதையில் தகராறு’ நண்பனை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இளைஞர்!

 

‘மதுபோதையில் தகராறு’ நண்பனை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இளைஞர்!

கூடுவாஞ்சேரி அருகே கோயில் வளாகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பிரியா நகர் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஞானதாஸ் (28). இவர் மீன்வளத்துறையில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர் பிரபாகரன் என்பவருடன் சேர்ந்து திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

‘மதுபோதையில் தகராறு’ நண்பனை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இளைஞர்!

ஆத்திரமடைந்த பிரபாகரன், பீர் பாட்டிலால் ஞானதாஸினை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஞானதாஸ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இன்று காலை கோவிலுக்கு சென்றவர்கள், ஞானதாஸின் சடலம் அங்கே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

‘மதுபோதையில் தகராறு’ நண்பனை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இளைஞர்!

பின்னர், அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை தேடி வருகின்றனர்.