மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: வீட்டுக்கு வெள்ளை அடித்த போது நேர்ந்த சோகம்!

 

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: வீட்டுக்கு வெள்ளை அடித்த போது நேர்ந்த சோகம்!

திருச்செங்கோடு அருகே வெள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மின்சாரம் தாக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. அண்மையில் சென்னை புளியந்தோப்பு அருகே சாலையில் நடந்த சென்ற பெண், வெளியே கிடந்த மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து வேலூர் அருகே வயலில் மோட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: வீட்டுக்கு வெள்ளை அடித்த போது நேர்ந்த சோகம்!

திருச்செங்கோடு பகுதியில் வசித்து வரும் இளைஞர் கவுதம்(20). இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே கவுதமின் உயிரிழப்புக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.