குடிபோதையில் குளத்தில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 

குடிபோதையில் குளத்தில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து மது இல்லாமல் தவித்து வந்த குடிமகன்களுக்காக, கடந்த 16 ஆம் தேதி மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. அன்றில் இருந்து மதுபோதையில் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் குடிபோதையில் குளத்தில் இறங்கி குளித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் குளத்தில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு!

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட மாகாளியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் பூபதி. இவரது மகனான தினேஷ், எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்திருக்கிறார். எப்பொழுதுமே தினேஷ் அதிகமாக மது அருந்துவார் என்று கூறப்படுகிறது. அதே போல நேற்றும் மது அருந்திவிட்டு, தனது நண்பர்கள் 3 பேருடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் இருக்கும், தெப்பகுளத்தில் குளித்துள்ளார்.

குடிபோதையில் குளத்தில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஏற்கனவே அதிகமாக மது அருந்தியிருந்த தினேஷ், நிலை தடுமாறி தெப்ப குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், அப்போது அவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தினேஷின் உடலை மீட்டுள்ளனர். மேலும், அங்கு வந்த போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.