‘திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’ : இளைஞர் கைது!

 

‘திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’ : இளைஞர் கைது!

தாராபுரம் அருகே 16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’ : இளைஞர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சின்ன புத்தூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் சூர்யா (21). இவர் ஒரு பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நீலாங்காளிவலசு பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் சூர்யா நெருங்கிப் பழகி வந்துள்ளார். திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

‘திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’ : இளைஞர் கைது!

இந்த நிலையில், சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரணை செய்ததில், சூர்யா காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூர்யா மீது மூலனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.