’17 வயது சிறுமி கர்ப்பம்’: திருமண ஆசைக் காட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

 

’17 வயது சிறுமி கர்ப்பம்’: திருமண ஆசைக் காட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

மொரப்பூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் குமரன். மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலாக மாற, குமரன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைக் காட்டியிருக்கிறார். அதனை அந்த சிறுமி நம்பிய நிலையில், குமரன் சிறுமியை வன்கொடுமை செய்திருக்கிறார்.

’17 வயது சிறுமி கர்ப்பம்’: திருமண ஆசைக் காட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

இதனை அறியாத சிறுமியின் பெற்றோர், திடீரென தனது மகள் கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி குமரன் தன்னை வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரது பெற்றோர் குமாரனிடம் கேட்டுள்ளனர். அதற்கு குமரன் ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், குமரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.