‘திருமண ஆசைக்காட்டி’ சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது!

 

‘திருமண ஆசைக்காட்டி’ சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது!

மதுரை மாவட்டம், புதுக்கோட்டை அருகே இருக்கும் தென்பழஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கபாண்டி (27). இவருக்கு கடந்த 8 ஆண்டுகள் முன்னரே திருமணம் ஆகிவிட்டதாம். மனைவியுடன் வசித்து வரும் இவர், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கபாண்டி, பக்கத்து ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவியிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்திருக்கிறார்.

‘திருமண ஆசைக்காட்டி’ சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது!

காதலிப்பதாகக் கூறி, திருமண ஆசைக் காட்டி தவறாக பழகி வந்திருக்கிறார். பலமுறை சிறுமியின் வீட்டுக்கு தெரியாமல் வெளியே அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் உடலில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அதில், சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில், தங்கபாண்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தெரிவித்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தங்கபாண்டி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், தங்கபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.