குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் மாடகொட்டான் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (32). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த அஜிதா(22) உடன் திருமணம் நடைபெற்து. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், அஜிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த அவர், வயிற்று வலியால் தனக்கு குழந்தை பிறக்காது என்று கருதி உள்ளார்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

இதனால் வாழ்வில் விரக்தி அடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு அஜிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் கேணிக்கரை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து அஜிதாவின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளில் அஜிதா தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.