குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

விழுப்புரம்

திண்டிவனம் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சக்திவேல் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், மதுகுடித்து விட்டு அடிக்கடி மனைவி உடன் தகராறு செய்து வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

இதனால் வாழ்வில் விரக்தியடைந்து காணப்பட்ட பிரியா, சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 3 ஆண்டுகளில் பிரியா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.