குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கொடிக்குளம் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணசேன், மது அருந்து விட்டு சென்று மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு சென்ற அவர், மனைவி மாலாவுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் மனமுடைந்த மாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து, புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.