பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

கரூர்

கரூர் அருகே வயிற்று வலியால் அவதிபட்டு வந்த பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த முருகையன் மனைவி செல்வாம்பாள். இவர் காகித ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரியாங்கா(26) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான பிரியாங்காவிற்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் குணமடையவில்லை என கூறப்படுகிறது.

பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில், பிரவீன் தனது தாயார் செல்வாம்பாளை அலுலகத்தில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த பிரியாங்காவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. வலி தாங்க முடியாமல் துடித்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் பிரவீன் வீட்டிற்கு திரும்பியபோது, பிரியாங்கா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களுடன் சேர்ந்து பிரியாங்காவை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியாங்காவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து செல்வாம்பாள் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.