சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர்!

 

சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர்!

சென்னை வந்துகொண்டிருக்கும் சசிகலாவுடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா இன்று சென்னை திரும்புகிறார். கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கொரோனா குணமாகிய நிலையில், அவர் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தார். தற்போது கொரோனா தனிமைக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால் அவர் காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார். தமிழகம் வரும் சசிகலாவுக்கு அதிருப்தி அதிமுக மற்றும் அமமுகவினர் ஒன்றுகூடி பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர்!

இந்நிலையில் சென்னை திரும்பும் வழியில் இளைஞரின் விருப்பத்தை ஏற்று காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார் சசிகலா.முன்னதாக சசிகலா பயணித்து வந்த காரில் இருந்து அதிமுக கொடி இருந்த நிலையில் அதிமுக கொடியுடன் தமிழகத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.ஆனால் டுவிஸ்ட் வைக்கும் விதமாக தமிழக எல்லைக்கு வந்த பிறகு, அதிமுக உறுப்பினர் காரில்ஏறி , அதிமுக கொடியுடன் சசிகலா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.