வீடு வீடாக ‘நள்ளிரவில் ஜன்னலில் பெட்ரூமை எட்டிப்பார்க்கும் இளைஞர்’ பீதியில் மக்கள்!

 

வீடு வீடாக ‘நள்ளிரவில் ஜன்னலில் பெட்ரூமை எட்டிப்பார்க்கும் இளைஞர்’ பீதியில் மக்கள்!

கோவை அருகே இளைஞர் ஒருவர் வீடு வீடாக சென்று நள்ளிரவில் பெட்ரூமை எட்டிப் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் பகுதியில் இருக்கும் வீடுகளில், நள்ளிரவில் சைக்கிளில் வரும் இளைஞர் ஒருவர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பெட்ரூம் இருக்கும் பகுதிகளில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்துள்ளார். எதேர்ச்சியாக, இளைஞர் எட்டிப் பார்ப்பதை கவனித்த பெண் ஒருவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

வீடு வீடாக ‘நள்ளிரவில் ஜன்னலில் பெட்ரூமை எட்டிப்பார்க்கும் இளைஞர்’ பீதியில் மக்கள்!

இளைஞரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை மக்கள் சோதித்து பார்த்துள்ளனர். அதில், அந்த இளைஞர் வந்து செல்வது முழுவதுமாக பதிவாகி இருந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், அந்த இளைஞர் யார்? திருடுவதற்காக நோட்டமிட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.