`16 வயது சிறுமியுடன் கல்யாணம்; செக்ஸ் உறவு!’-வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

 

`16 வயது சிறுமியுடன் கல்யாணம்; செக்ஸ் உறவு!’-வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

16 வயது சிறுமியை திருமணம் செய்து செக்ஸ் உறவில் ஈடுபட்ட வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் குமார் (23). கடந்த 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமியை இவர் திருமணம் செய்தார். அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் காவல்துறையினர் போக்ஸோ சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி குமாரின் தந்தை கோபால், தாய் சரோஜா, அக்காள் திவ்யா, பெரியம்மா தனம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜாமீனில் குமார் வெளியே வந்தார். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

`16 வயது சிறுமியுடன் கல்யாணம்; செக்ஸ் உறவு!’-வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி மலர்விழி, சிறுமியை திருமணம் செய்த குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கோபால், சரோஜா, திவ்யா, தனம் ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குமாரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.