திருமணமான 1 வருடத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

திருமணமான 1 வருடத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர்

சிவகாசி அருகே திருமணமான ஒரு வருடத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருநகர் மாவட்டம் சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் காளிராஜன் (28). கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு அழகுராஜாத்தி என்பருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பிணியாக உள்ள அழகுராஜாத்திக்கு, சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, காளிராஜ், மனைவியுடன் அவரது பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

திருமணமான 1 வருடத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்ற காளிராஜன், சேனையாபுரம் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஓராண்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.