மனைவி பிரிந்து சென்றதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் ராஜக்காமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விசாலினி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விசாலினி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் தனியாக வசித்து வந்த பிரபாகரன், சேர்ந்து வாழ வரும்படி பலமுறை விசாலினியை அழைத்தும், அவர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கடந்த வாரம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்து உள்ளார். ஆனால், விசாலினி சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட பிரபாகரன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.