திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை!

 

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை!

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (25). இவர் வாகனம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தட்சணாமூர்த்தி ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த தட்சணாமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.