இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – விடுதி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – விடுதி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் சாமா நகரில் ஒய்.எம்.சி.ஏ நிர்வாகத்தின் கீழ் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியின் செயலாளரான மோசஸ், அருகாமையில் வசித்து வருகிறார். விடுதிக்கு வரும் பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – விடுதி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த விருதுநகரை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இது குறித்து திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மோசஸ் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வந்தனர்.