குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை –  கோட்டாட்சியர் விசாரணை!

கடலூர்

கடலூர் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கொடி (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அறிவழகன், மனைவி பூங்கொடி உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை –  கோட்டாட்சியர் விசாரணை!

இதில் மனமுடைந்த பூங்கொடி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை பரிதாபமாக பூங்கொடி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூங்கொடியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சோழதரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளில் பூங்கொடி தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.