குடும்பமாக வந்த கொள்ளையர்கள் -ஏமாந்த நகைக்கடைகாரர் -புது டெக்னிக்கில் 2கோடி நகை கொள்ளை .

 

குடும்பமாக வந்த கொள்ளையர்கள் -ஏமாந்த நகைக்கடைகாரர் -புது டெக்னிக்கில் 2கோடி நகை கொள்ளை .


கணவன் மனைவி போல வந்த கொள்ளையர்கள் ஒரு நகைக்கடையில் 2 கோடி ரூபாய் நகைகளை ஏமாற்றியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருக்ராமில் பிரிவு 46 இல் வசிக்கும் ரிஷாப் சூரி மற்றும் தன்யா சூரி.ஆகிய இருவரும் விஜய் வர்மா என்பவருடன் சேர்ந்து பல மோசடி கால் சென்டர் நடத்தி பலரை ஏமாற்றியுள்ளனர் .அவர்கள் அந்த பணத்தை பல சூதாட்டத்தில் இழந்து விட்டனர் .அடுத்து வேறு ஒரு மோசடி செய்து பணம் ஈட்ட திட்டம் போட்டனர் .

குடும்பமாக வந்த கொள்ளையர்கள் -ஏமாந்த நகைக்கடைகாரர் -புது டெக்னிக்கில் 2கோடி நகை கொள்ளை .


அதன் படி கடந்த வாரம் டெல்லி கரோல் பார்க் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு அந்த நபர்கள் குடும்பமாக அடிக்கடி விஜயம் செய்தனர் .அப்போதெல்லாம் அவர்கள் விதவிதமான கார்களில் வந்து நகைகள் வாங்கி சென்றனர் .அப்போது அவர்கள் அந்த நகைக்கடை ஓனரின் நம்பிக்கையை பெறும்படி நடந்து கொண்டு சிறு சிறு தொகைக்கு நகைகள் வாங்கி சென்றனர் .பின்னர் ஒருநாள் அவர்கள் அந்த நகைக்கடைக்கு வந்து அந்த ஒனரிடம் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு விதவிதமான புது மாடல் நகைகள் வேண்டுமென்று கூறி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4கிலோ தங்க நகைகளை பணம் கொடுக்காமல் வாங்கி சென்றனர் .அதன்பிறகு அந்த நபர்களின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .அதனால் அந்த நகை கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அவர்களை பற்றி அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த கொள்ளையர்கள் ரிஷாப் சூரி மற்றும் தன்யா சூரி ஆகியோரை கைது செய்தனர் .மற்றொரு கூட்டாளி விஜய் வர்மாவைத் தேடி வருகிறார்கள்.