நாளை யாஸ் புயல்…4 மாவட்டங்களில் கனமழை!

 

நாளை யாஸ் புயல்…4 மாவட்டங்களில் கனமழை!

வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி திருச்சி அரியலூர் பெரம்பலூர் மதுரை திருநெல்வேலி தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை யாஸ் புயல்…4 மாவட்டங்களில் கனமழை!

அதே போல் அடுத்த நான்கு நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை யாஸ் புயல்…4 மாவட்டங்களில் கனமழை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.