இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு!

 

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு!


ஈரோடு ஆக 22 –
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு ஈரோட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஈரோட்டை பொறுத்தவரை இந்து முன்னணி சார்பில் மாநகர் பகுதியில் 100 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடு வது வழக்கம். பின்னர் அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவேளை உடனே சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சம்பத் நகரில் இந்து முன்னணி நிர்வாகி சொந்தமான இடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு!
Rep. Image

சிறிய அளவிலான விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் வழிபட்டனர் மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் பிரச்சார அணி தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழிபட்டனர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைப்போல் மாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.