கார்த்திகை தீபம் – பெரியகோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

 

கார்த்திகை தீபம் – பெரியகோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருமுறைகள் பாடல் முழங்க சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபம் – பெரியகோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையார் மற்றும் பிரகன் நாயகி உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் பிரகாரத்தில் வலம் வந்த சுவாமி, பெரிய கோயில் நுழைவு வாயில் முன்பு எழுந்தருளினர்.

கார்த்திகை தீபம் – பெரியகோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

அப்போது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.