ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

 

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

சிந்தாமணியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மட்டன் பிரியாணியின் பூழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 104 வது வார்டில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் கமலக்கண்ணன். இவர் ஆன்லைனில் உள்ள பிரபல உணவகத்தில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதன்படி 40 நிமிடத்திற்கு பிறகு அவருக்கு பிரியாணி டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்தபோது அதில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரித்த போது உணவு தயாரித்தபோது சரியாக இருந்ததாகவும் டெலிவரி செய்த நபர் மீதே தவறு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையின் எண்ணில் தொடர்பு கொண்ட உதவி பொறியாளர் இதுகுறித்து புகார் அளித்தார்.