திடீரென தோன்றிய 5 அடி பள்ளம் ! கண்இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்த கார் !
பிரேசிலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்ததில் தாயும், மகளும் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் சுரங்கத்தில் நடைபெற்றபோது திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு அதில் கார் விழுந்து சிக்கியது. அண்ணா சாலையில் சபையர் திரையரங்கம் இருந்த இடத்திற்கு எதிரே நடந்த இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் கிரேன் மூலம் அந்த கார் மீட்கப்பட்டது.
பிரேசிலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்ததில் தாயும், மகளும் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் சுரங்கத்தில் நடைபெற்றபோது திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு அதில் கார் விழுந்து சிக்கியது. அண்ணா சாலையில் சபையர் திரையரங்கம் இருந்த இடத்திற்கு எதிரே நடந்த இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் கிரேன் மூலம் அந்த கார் மீட்கப்பட்டது.
இதேபோல் ஒரு சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலின் ப்ளோரிஸ் டா சுன்ஹா பகுதியில் ஒரு லாரி சாலையைக் கடந்து சென்ற அடுத்த நொடி, சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவாகிறது. திடீரென ஏற்பட்ட பள்ளத்தை பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஓட்டுநர் சாதுர்யமாக காரை வலதுபுறம் திருப்பி உயிர் தப்பினார்.
ஆனால் அந்த காரை பின்னால் தொடர்ந்து வந்த மற்றொரு காருக்கு அங்கு பள்ளம் ஏற்பட்டது தெரிய வாய்ப்பில்லை. அதனால் அந்த பள்ளத்திற்கள் விழுந்தது கார். அந்த குழிக்குள் கார் சென்று முழுவதுமாக இறங்கிவிடுகிறது.
WAIT FOR IT: A truck's opened up a sinkhole in Brazil… which promptly swallowed a car following behind. The driver wasn't seriously hurt @10NewsFirst @10Daily @theprojecttv #whoops pic.twitter.com/6wPNetA0xr
— Dougal Wallace? (@DougalWallace) November 22, 2019
இந்த காரில் பயணம் செய்த தாய் மற்றும் அவரது 12 வயது மகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்புகின்றனர். பின்னர் கார் கதவை திறந்து வெளியே வரும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இவ்வளவு பெரிய பள்ளத்தில் காருடன் கவிழ்ந்தும் காயமின்றி தப்பியது குறித்து அங்குள்ளவர்கள் அதிசயம் தெரிவித்தனர்.