சீனா மதிப்பாக நடந்து கொள்ள வேண்டும்; கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது – முன்னாள் ஐ.நா அமெரிக்க தூதர்

 

சீனா மதிப்பாக நடந்து கொள்ள வேண்டும்; கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது – முன்னாள் ஐ.நா அமெரிக்க தூதர்

சீனா கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக முன்னாள் ஐ.நா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: சீனா கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக முன்னாள் ஐ.நா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

“சீனாவில் 150 கோடி மக்கள் வாழும் நாடாகும். அந்த நாட்டில் 82,000 கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 3,300 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை தெளிவாக இல்லை” என்று முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

USA

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் சீனா அளித்த புள்ளிவிவரங்களை நம்பவில்லை என்று கூறினார். “அவர்களின் எண்ணிக்கை பரவாயில்லை என்ற ரகம் போல கொஞ்சம் இருப்பதாகத் காட்டப்படுகிறது” என்று டிரம்ப் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது.