உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை எட்டியது!
நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
உலகளவில் நேற்று ஒரே நாளில் ஒரு இந்தியர் உள்பட 862 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,503 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,97,135 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சத்தை பயன்படுத்தி பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பிராந்தியத்தில் உள்ள 4 சிறைகளிலிருந்து 1,500 கைதிகள் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.