இத்தாலியில் ஒரே நாளில் 475 பேரை பலிகொண்ட கொரோனா!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 475 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 2,503 லிருந்து 2,978 ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.