ரப்பர் பெட்டிகளில் அடைத்து ஆயிரம் நாய்கள் கொடூர கொலை

 
ட்

ரப்பர் பெட்டிகள், சாக்கு பைகள் , இரும்பு கூண்டுகளில் அடைத்து வைத்து பட்டினி போட்டு ஆயிரக்கணக்கான நாய்களை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றன. தென்கொரியாவில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

 தென்கொரியாவில் வடமேற்கில் அமைந்திருக்கும் கியாங்கி மாகாணத்தில் யாங் பியாங் நகர்.   இந்த நகரில் வசித்து வரும் நபர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை காணவில்லை என்று ஒவ்வொரு வீடாக சென்று தேடியிருக்கிறார்.   அப்போது ஒரு வீட்டில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு  கொடுமைப் படுத்தப்பட்டு வருவதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

க்

 அந்த வீட்டில் சாக்கு பைகள், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகளில் ஆயிரக்கணக்கில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போட்டு படுகொலை செய்யப்படுவதை பார்த்து கடும் அதிர்ச்சிக்கு  ஆளாகி இருக்கிறார்.

 பல நாட்களாக,  பல வருடங்களாக இப்படி செய்யப்பட்டு வருவதால் சில நாய்கள் எலும்புக்கூடுகளாக இருந்திருக்கின்றன.  சில நாய்கள் சதைகள் எல்லாம் அழுகி அந்த கூண்டுகளில்,  சாக்குப்பைகளில்,  ரப்பர் பெட்டிகளில் கிடந்திருக்கின்றன.   பல நாய்கள் தண்ணீர், உணவு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு நடைபெற்று இருந்திருக்கின்றன.

 இதை பார்த்ததும் விலங்குகள்  ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.  அவர்கள் விரைந்து வந்து அங்கு விசாரணை செய்த போது தான்,  அந்த வீட்டில் உள்ள 60 வயது நபர் தான் நாய்களை இப்படி அடைத்து வைத்து படுகொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து மூன்று வருடங்களாக இப்படி அந்த செயலை செய்து வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

நாய்கள் பராமரிப்பு இல்லம் என்கிற பெயரில் பராமரிப்புத் தொகையையும் வாங்கிக்கொண்டு உரிமையாளர்களிடம் நாயை வாங்கிய பின்னர் அவற்றை இப்படி பட்டினி போட்டு  கொலை செய்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.    இதை அடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி நடத்தி வருகின்றனர்.